திருவண்ணாமலை மாவட்டம், போளூர் நீதிமன்ற நிறுத்தத்தில் பேருந்துகள் நிற்காததைக் கண்டித்து, வழக்கறிஞர்கள் மற்றும் பொதுமக்கள்
சாலை மறியலில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலை மாவட்டம், போளூர் பகுதியில் கடலூர் – சித்தூர் தேசிய நெடுஞ்சாலையில பங்களா மேடு கூட்டு சாலையில் நீதிமன்றம் அமைந்துள்ளது.
இங்கு அரசு மற்றும் தனியார் பேருந்துகள் நிறுத்தம் செய்ய மாவட்ட ஆட்சியர் மற்றும் வருவாய் கோட்டாட்சியர் பேருந்துகளுக்கு உத்தரவு பிறப்பித்தனர். இருந்த போதிலும், பேருந்துகள் நிற்காமல் செல்வதாக கூறப்படுகிறது.
இதனால், பொதுமக்கள், வழக்கறிஞர்கள் மற்றும் மாணவர்கள் என பல்வேறு
தரப்பினரும் உரிய நேரத்திற்கு பணிக்கு செல்ல முடியாமல் அவதிப்பட்டு
வருகின்றனர். இது குறித்து போக்குவரத்து துறை மற்றும் காவல்துறை,
உள்ளிட்டோரிடம் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இதனால் , ஆத்திரமடைந்த வழக்கறிஞர்கள் மற்றும் பொதுமக்கள் ஒரு மணி
நேரமாக போளூர் – வேலூர் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மேலும், தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் சாலை மறியலில்
ஈடுபட்ட வழக்கறிஞர்கள் மற்றும் பொதுமக்களிடம் சமாதான முயற்சி
மேற்கொண்டனர். அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக
உறுதி அளித்ததை தொடர்ந்து, ஒரு மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற
சாலை மறியல் முடிவுக்கு வந்தது.
—-கு.பாலமுருகன்