கேரளாவில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதை அடுத்து அங்கு முக்கிய நகரங்களின் சாலைகள் வெறிச்சோடிக் காணப்படுகின்றன.
கேரளாவில் கொரோனா தொற்று கட்டுக்கடங்காமல் பரவி வருகிறது. நாள்தோறும் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த இரவு நேர ஊரடங்கு போன்ற கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டன.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
தொற்று பரவல் குறையாமல் இருந்து வந்த நிலையில், முழு ஊரடங்கை அமல்படுத்த கேரள அரசு முடிவு செய்தது. அதன்படி, நேற்று முதல் வரும் 16ம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக, அரசு பேருந்து உள்ளிட்ட அனைத்து வாகன போக்குவரத்திற்கும் தடை
விதிக்கப்பட்டுள்ளது. இதனால் முக்கிய நகரங்களின் சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன. போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.