மணிரத்னம் இயக்கிய ரோஜா படத்தின் மூலம் திரையுலகில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஏ.ஆர். ரகுமான். தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி மற்றும் ஆங்கிலம் என பல்வேறு மொழி படங்களுக்கும் இசையமைத்துள்ள ஏ.ஆர். ரகுமான் இரண்டு ஆஸ்கார் விருதுகளையும் பெற்றுள்ளார்.
இந்த நிலையில் ஏ.ஆர். ரகுமான், இன்று தனது 59வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையொட்டி அவருக்கு அரசியல் கட்சித் தலைவர், திரைப் பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், ஏ.ஆர்.ரகுமானுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “இசையால் எல்லைகளைக் கடந்து, எட்டுத்திக்கும் ஆளும் அன்பு இளவல் இசைப்புயல் ஏ.ஆர். ரகுமான் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்! உங்களது இசையைப் போலவே நீங்களும் என்றும் இளமையோடும் துள்ளலோடும் திகழ்ந்து, தொடர்ந்து சாதனைகளைப் படைத்திட விழைகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.







