தை முதல் நாளையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கருணாநிதியின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எந்த நிகழ்வாக தொடங்குவதாக இருந்தாலும் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நினைவிடத்திற்கு சென்றுவிட்டுத்தான் தொடங்குவது வழக்கம். திமுகவைச் சேர்ந்த அனைத்து தலைவர்களும் தமிழர் திருநாளான பொங்கல் திருநாளை கொண்டாடுவது வழக்கம். சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது மனைவி துர்கா ஸ்டாலினுடன் மரியாதை செலுத்தினார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மேலும், திமுக பொருளாளர் டிஆர்.பாலு, அமைச்சர்கள் பொன்முடி, சேகர் பாபு உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினர். பின்னர், கருணாநிதி நினைவிட கட்டுமான பணிகள் தொடர்பான அறிவுறுத்தல்களையும் முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார். தொடர்ந்து கோபாலபுரம் இல்லத்தில் கருணாநிதியின் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தி தனது தாயார் தயாளு அம்மாளிடம் வாழ்த்து பெற்றார்.