கர்நாடகா தேர்தல் 2023 – நாளை வாக்குப்பதிவு; ஏற்பாடுகள் தீவிரம்…!

கர்நாடக சட்டப்பேரவைக்கு நாளை தேர்தல் நடைபெறும் நிலையில், அதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் தீவிரப்படுத்தி உள்ளது. கர்நாடகாவில் நாளை சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. மே 13 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு…

கர்நாடக சட்டப்பேரவைக்கு நாளை தேர்தல் நடைபெறும் நிலையில், அதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் தீவிரப்படுத்தி உள்ளது.

கர்நாடகாவில் நாளை சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. மே 13 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. மொத்தமுள்ள 224 தொகுதிகளில் 113 இடங்களை பிடிக்கும் கட்சியே ஆட்சியை பிடிக்கும். தேர்தல் நெருங்கிய நிலையில் பாஜக, காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டன.

இந்தியா முழுவதும் உற்று நோக்கும் இந்த தேர்தலுக்காக, தமிழ்நாட்டிலிருந்தும் அரசியல் கட்சித் தலைவர்கள் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். இதனையடுத்து நேற்று மாலை 6 மணியுடன் தேர்தல் பிரச்சாரம் நிறைவுபெற்றது.

இதையும் படியுங்கள் : முதலமைச்சர் நினைத்தால் அமைச்சர்களை மாற்றலாம் – அமைச்சரவை மாற்றம் குறித்த கேள்விக்கு அமைச்சர் துரைமுருகன் பதில்

இந்நிலையில் நாளை நடைபெற உள்ள வாக்குப்பதிவை முன்னிட்டு தேர்தல் ஆணையம் ஏற்பாடுகளை தீவிரப்படுத்தி உள்ளது. தொகுதிக்கு தொடர்பு இல்லாத வெளிமாநில நபர்கள் அங்கிருந்து வெளியேறும்படி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. வாக்கு சேகரிப்பு மையங்களும் தயார் நிலையில் உள்ளன. இந்த தேர்தலில், பாஜக, காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகளின் வேட்பாளர்கள் என மொத்தம் 2,615 வேட்பாளர்கள் களத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.