காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் பிரம்மோற்சவம்!

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலின் வருடாந்திர பிரம்மோற்சவத்தையொட்டி லட்சுமி சரஸ்வதி தேவியருடன் உற்சவர் காமாட்சி அம்மன் அலங்கார மண்டபத்தில் இருந்து கொடிக்கம்பம் அருகில் உள்ள…

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது.


காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலின் வருடாந்திர பிரம்மோற்சவத்தையொட்டி லட்சுமி சரஸ்வதி தேவியருடன் உற்சவர் காமாட்சி அம்மன் அலங்கார மண்டபத்தில் இருந்து கொடிக்கம்பம் அருகில் உள்ள மண்டபத்திற்கு எழுந்தருளினார். பின்னர் கோயில் ஸ்தானீகர்களால் அஸ்திர தேவர் வைக்கப் பட்டிருந்த சிறிய பல்லக்கு ஒன்றில் கொடிப் பட்டமும் வைக்கப்பட்டு மேளதாளங்களுடன் சுற்றுப்பிரகாரத்தில் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது.

இதனையடுத்து கோயிலில் உள்ள தங்க கொடிமரத்தில் கொடியேற்ற நிகழ்வு நடைபெற்றது. கொடியேற்றத்திற்கு பிறகு சிறப்பு தீபாராதனைகளும் நடைபெற்றன. வாண வேடிக்கைகளும் நடைபெற்றன.

பிரம்மோற்சவத்தையொட்டி கோயில் முழுவதும் வண்ண விளக்குகளாலும், வண்ண மலர்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது. பிரமோற்சவ விழாவையொட்டி தினசரி காலையிலும், மாலையிலும் அம்மன் வெவ்வேறு வாகனங்களில் அலங்காரமாகி ராஜ வீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார். நிகழ் மாதம் 27ஆம் தேதி தங்க சிம்ம வாகனத்திலும் மார்ச் 3ஆம் தேதி தேரோட்டமும் நடைபெறுகிறது. மார்ச் 5ஆம் தேதி இரவு தேரோட்டம் நடைபெறுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.