தமிழகச் சட்டமன்ற தேர்தலான இன்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் சென்னை, ஆழ்வார்பேட்டை வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களித்தார்.
தமிழகத்தில் 234 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு தொடங்கியது. கன்னியாகுமரி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவும் இன்று நடைபெறுகிறது. கேரளா, புதுச்சேரியில் ஒரே கட்டமாக நடைபெறும் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று தொடங்கியது.அசாம், மேற்கு வங்கத்திலும் இன்று வாக்குப்பதிவு தொடங்கியது. மேலும் முன்னணி நடிகர், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல் சென்னை, ஆழ்வார்பேட்டை வாக்குச்சாவடிக்கு தங்கள் மகள்கள் ஸ்ருதி ஹாசன் மற்றும் அக்ஷரா ஹாசனுடன் சென்று தனது ஜனநாயகக் கடமையை ஆற்றினார்.







