கல்வித் தொலைக்காட்சி வாயிலாகவே கற்பித்தல் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், கல்வித் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் பாடங்கள் குறித்த அட்டவணையை அனைத்து மாணவர்களுக்கும் தெரியப்படுத்த வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.
மேலும், பள்ளிகள் திறக்கப்படுவது இப்போதைக்கு இல்லை என்பதால், கல்வித் தொலைக்காட்சி வாயிலாகவே கற்றல் – கற்பித்தல் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிகளில் புதிதாக சேர்ந்துள்ள மாணவர்களுக்கு, நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி பாடப்புத்தகங்களை வழங்கவேண்டும் எனவும், பள்ளிக்கு மாணவர்களை வரவழைக்கும்போது, உரிய வழிகாட்டுதல்களை கடைபிடிக்க வேண்டும் எனவும் தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.







