ஜப்பான் மக்கள் மத்தியில் பல நாட்களாக ஒலிம்பிக் தீப ஓட்டம் நடக்குமா என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில் தற்போது ஒலிம்பிக் தீப ஓட்டம் நடத்த நடவடிக்கை எடுத்துவருவதாக டோக்கியோ கமிட்டியினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
2019 ஆண்டில் சீனாவின் வுஹான் நகரத்திலிருந்து பரவிய கொரோனா வைரஸ் தற்போதுவரை உலகையே அச்சுறுத்தி வருகிறது. தினந்தோறும் அதிகரித்து வரும் கொரோனா வைரசின் தாக்கத்தால் மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப முடியாமல் தவிக்கின்றனர்.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் வருடந்தோறும் ஒலிம்பிக் போட்டி நடப்பது வழக்கம். ஆனால் இந்த ஆண்டில் கொரோனா ஊரடங்கால் ஒலிம்பிக் போட்டியை நடத்துவதில் பெரும் சிக்கல் நிலவி வந்தது. இறுதியில், ஒரு வழியாக அடுத்த மாதம் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் ஓட்டம் நடக்க உள்ளது. நடக்க இருக்கும் ஒலிம்பிக் ஓட்டத்திற்கு முன்பாக ஜப்பானில் ஒலிம்பிக் சம்பிரதாய தீப ஊர்வலம் நடத்துவது வழக்கம். ஆனால் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பரவலின் காரணமாக ஜப்பானின் சாகனோ மற்றும் ஒசாகா நகரத்தில் ஒலிம்பிக் தீப ஓட்டம் நடைபெற வாய்ப்பில்லை எனச் செய்திகள் வெளியானது.
வெளியான செய்திகளுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள டோக்கியோ கமிட்டியினர், நாகனோ மற்றும் ஒசாகா நகரத்தில் ஒலிம்பிக் தீப ஓட்டத்தை நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளனர்…







