கோட் படத்தை தொடர்ந்து விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் ’ஜன நாயகன்’. ஹெச். வினோத் இயக்கியுள்ள இப்படத்தில் விஜயுடன் பூஜா ஹெக்டே, பாபிதியோல், நரேன், மமிதா பைஜு, பிரியா மணி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். பொங்கல் திருநாளை முன்னிட்டு இப்படம் ஜனவரி 9 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், தணிக்கை சான்றிதழ் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து தணிக்கை விவகாரம் தொடர்பாக படத்தின் தயாரிப்பு நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த வழக்கில் இன்று காலை அளிக்கப்பட்டது. அத்தீர்ப்பில் , ஜனநாயகன் திரைப்படத்தை மறு ஆய்வுக்கு அனுப்பிய உத்தரவை ரத்து செய்தும், திரைப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்க தணிக்கை வாரியத்திற்கும் உத்தரவிடப்பட்டது.
சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பிற்கு எதிராக தணிக்கை வாரியம் தொடுத்த மேல்முறையீட்டு வழக்கு இன்று பிற்பகல் அவரசர வழக்காக விசாரிக்கப்பட்டது. அப்போது வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி ஸ்ரீ வஸ்தவா தலைமையிலான அமர்வு ஜன நாயகன் படத்துக்கு தணிக்கை சான்றிதழ் வழங்கும் தனி நீதிபதி உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தது. மேலும், மேல்முறையீட்டு மனுவுக்கு பதில் தர பட நிறுவனத்துக்கு நோட்டீஸ் வழங்க உத்தரவிட்டதுடன் வழக்கு விசாரணையை ஜன.21-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.







