ஜல்லிக்கட்டு போட்டியை பொறுத்தவரை நீதிமன்ற உத்தரவை பின்பற்றுவது என்ற நிலைப்பாட்டில் அரசு உள்ளதாக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் திருவப்பூர் அருகே அர்ச்சகர்கள் மற்றும் கோயில் பணியாளர்களுக்கு சீருடைகள், புத்தாடைகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு ஆகியோர் கலந்துகொண்டு 162 அர்ச்சகர்கள், 361 பூசாரிகள் மற்றும் 105 கோயில் பணியாளர்களுக்கு புத்தாடைகள் மற்றும் சீருடைகளை வழங்கினர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, ஜல்லிக்கட்டு போட்டிக்கு தடை கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளதை குறிப்பிட்டார். வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும் என தெரிவித்த அமைச்சர் ரகுபதி, எனினும் நீதிமன்ற உத்தரவை பின்பற்றும் நிலைப்பாட்டில் தான் அரசு உள்ளதாகவும் கூறினார்.
மேலும், அரசு அறிவித்துள்ள வழிகாட்டு நெறி முறைப்படி தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு நடத்தப்பட வேண்டும் என்பதுதான் தமிழக அரசின் நிலைப்பாடு எனவும் அவர் தெரிவித்தார்.