தமிழகத்தில் 234 தொகுதியிலும் உதயசூரியன் சின்னத்தில் நிற்க ஸடாலின் தயாரா என அமைச்சர் செல்லூர் ராஜூ சவால் விடுத்துள்ளார்.
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே தாராபட்டியில் கால்வாய் பாலத்தின் பூமி பூஜையை தொடங்கி வைத்த பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜூ, கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணிக் கட்சிகளுக்கு பேரம் பேசி பணம் கொடுத்தோம், என்ற ஸ்டாலினின் ஆணவ பேச்சால் திமுக கூட்டணி கட்சிகள் நீருபூத்த நெருப்பாக உள்ளதாக கூறினார்.
மேலும், ஸ்டாலின், கனிமொழி, உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் கூட்டணி தர்மத்தை மீறி கூட்டணி கட்சிகளை அலட்சியப்படுத்தி ஆணவத்துடன் பேசி வருவதாக குற்றம்சாட்டினார்.







