மக்கள் பணியாளனாக சிறப்பான பங்களிப்பை தமிழகத்திற்கு அளிப்பேன், என சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி தெரிவித்துள்ளார்.
சென்னை உயர்நீதிமன்றத்தின் 50ஆவது தலைமை நீதிபதியாக, புதிதாக பொறுப்பேற்றுக்கொண்ட சஞ்சீப் பானர்ஜிக்கு, உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில், கலந்துகொண்ட தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி, கொரோனா நோய்த் தொற்று காலம் தாழ்ச்சியை உருவாக்கி, நான் எனும் அகங்காரத்தை அழிக்க, நமக்கு கற்றுக்கொடுத்துள்ளது எனக் குறிப்பிட்டார்.
மேலும், தான் ஒரு மக்கள் பணியாளனாக சிறப்பான பங்களிப்பை, இந்த மாநிலத்திற்கு அளிப்பேன் என அவர் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய தலைமை நீதிபதி, தானும் தமிழகத்தின் ஒரு அங்கமாக இருப்பதில் பெருமைப்படுகிறேன், என்றும் பேசினார்.







