29.7 C
Chennai
May 20, 2024
முக்கியச் செய்திகள் தமிழகம்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என்னுடன் விவாதிக்க தயாரா? இபிஎஸ் சவால்

அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட திட்டங்கள் குறித்தும், திமுகவின் 18 மாத ஆட்சியின் சாதனைகள் குறித்து பொது இடத்தில் விவாதிக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தயாரா? என எடப்பாடி பழனிசாமி சவால் விடுத்துள்ளார்.

சேலம் மாவட்டம் எடப்பாடி ஆய்வு மாளிகையில் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், முதலமைச்சர் ஸ்டாலின் அரசு விழாவில் பல்வேறு கருத்துக்களை தெரிவித்துள்ளார். அதிமுக ஆட்சியில் தமிழகம் பாதாளத்திற்கு சென்றுள்ளதாக அரசு நிகழ்ச்சியில் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் தொழில் வளம் முன்னேற்றம் அடையவில்லை என தெரிவித்துள்ளார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

கடந்த அதிமுக ஆட்சிக்கு இந்தியா டுடே இதழ் தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சிறப்பாக உள்ளதாக விருது கொடுத்துள்ளனர். தற்போது தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரில் போதை பொருள்கள் பயன்பாடு அதிகரித்துள்ளது. இதற்கு ஆளும் கட்சியினர் தலையீட்டால் நடவடிக்கை எடுக்கவில்லை. இராமநாதபுரத்தில் பல கோடி மதிப்பில் ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில் திமுக கவுன்சிலர் கைது செய்யப்பட்டுள்ளார். திமுகவினரை ஸ்டாலினால் கட்டுப்படுத்த முடியவில்லை.

தமிழகத்தில் கொலை, கொள்ளை பாலியல் வன்கொடுமை நாள்தோறும் நடைபெறுகின்றது. இது ஊடங்களில் வரும் செய்தி உண்மை தண்மை அறிந்து செயல்பட வேண்டும். தமிழகத்தில் நிலவும் பிரச்சினை குறித்த கருத்துகளை எதிர்கட்சியாக கூறுகின்றோம். முதல்வர் இதனை ஏற்ற மறுக்கின்றார்.

மக்களை பற்றி முதல்வருக்கு கவலைவில்லை. தனது குடும்பத்தை பற்றி தான் முதலமைச்சருக்கு கவலை. திமுகவிற்கு வாக்களித்த மக்கள் வயிறு எரிந்து போய் உள்ளனர். 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் மக்கள் நல திட்டங்கள் பல நிறைவேற்றப்பட்டுள்ளது. அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட ஏழை எளிய மக்கள் பயன்பெறும் திட்டங்கள் திமுக அரசு வந்த உடன் கைவிடப்பட்டுள்ளது. 11 மருத்துவ கல்லூரிகளை தமிழகத்திற்கு கொண்டு வந்தோம் உங்களால் ஒரு மருத்துவ கல்லூரி கொண்டு வர முடியவில்லை.

தமிழகத்தில் அதிக தொழிற்சாலை கொண்டு வந்தது அதிமுகதான். 18 மாத திமுக ஆட்சியில் எப்படி சாத்தியம் ஆகும். அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட திட்டங்கள் குறித்தும், திமுகவின் 18 மாத ஆட்சியின் சாதனைகள் குறித்து பொது இடத்தில் தன்னுடன் விவாதிக்க ஸ்டாலின் தயாரா? என எடப்பாடி பழனிசாமி சவால் விடுத்தார். மேலும் எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து திமுக எம்பிகள் பாராளுமன்றத்தில் ஏன் கேள்வி எழுப்பவில்லை? எனவும் கேள்வி எழுப்பினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading