ஐபிஎல் 2023 : 5 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது பஞ்சாப் கிங்ஸ்

ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணியை 5 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பஞ்சாப் அணி த்ரில் வெற்றி பெற்றது. ஐபிஎல் தொடரின் 16வது சீசன் கோலாகலமாகத் தொடங்கி நடைபெற்று வருகிறது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்றுள்ள…

ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணியை 5 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பஞ்சாப் அணி த்ரில் வெற்றி பெற்றது.

ஐபிஎல் தொடரின் 16வது சீசன் கோலாகலமாகத் தொடங்கி நடைபெற்று வருகிறது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்றுள்ள இந்த தொடரில், ஒவ்வொரு அணியும் போட்டிகளில் வெற்றி பெற தீவிரம் காட்டி வருகின்றன. அந்த வகையில், நேற்று கவுகாத்தியில் நடைபெற்ற ஆட்டத்தில், பஞ்சாப் கிங்ஸ் அணியுடன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மோதியது.

இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 197 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக கேப்டன் ஷிகர் தவான் 86 ரன்களும், சிம்ரன் சிங் 60 ரன்களும் விளாசினர்.

இதையும் படியுங்கள் : ஐபிஎல் 2023; ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் 197 ரன்கள் குவிப்பு

இதையடுத்து 198 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணி, 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 192 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் 5 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி த்ரில் வெற்றி பெற்றது. பஞ்சாப் அணியின் நாதன் எல்லிஸ் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.