பெங்களுரூ அணிக்கு எதிரான இன்றைய ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணி 204 ரன்களை குவித்தது.
16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் கடந்த 31ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று 9வது லீக் ஆட்டம் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்-பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற அணி பெங்களூரு அணியின் கேப்டன் டு பிளசிஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி கொல்கத்தா முதலில் பேட்டிங் செய்தது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
தொடக்க ஆட்டக்கரார்களாக வெங்கடேஷ் ஐயர் , ரஹ்மத்துல்லா குர்பாஸ் களமிறங்கினர். தொடக்கத்தில் டேவிட் வில்லே பந்துவீச்சில் வெங்கடேஷ் ஐயர், மந்தீப் சிங் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். பின்னர் கேப்டன் நிதிஸ் ராணா 1 ரன்களில் வெளியேறினார்.மறுமுனையில் ரஹ்மத்துல்லா குர்பாஸ் அதிரடியாக விளையாடினார். பந்துகளை பவுண்டரி, சிக்சர் என நாலாபுறமும் பறக்க விட்ட அவர் அரைசதம் அடித்தார். தொடர்ந்து ஆடிய அவர் 57 ரன்களில் கரண் சர்மா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த ரசல் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். அதற்கு அடுத்து இணைந்த ரிங்கு சிங் மற்றும் ஷர்துல் தாக்கூர் சிறப்பாக விளையாடினர்.
குறிப்பாக ஷர்துல் தாக்கூர் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். தொடர்ந்து அதிரடியாக விளையாடிய அவர் 20 பந்துகளில் அரைசதம் அடித்தார். மறுபுறம் அதிரடியாக விளையாடிய ரிங்கு சிங் 46 ரன்களில் வெளியேறினார். இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 204 ரன்கள் எடுத்தது. ஷர்துல் தாக்கூர் 29 பந்துகளில் 68 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். தொடர்ந்து 204 ரன்கள் இலக்குடன் பெங்களூரு அணி விளையாடுகிறது.