இந்தோனேஷியாவில் சிறை பிடிக்கப்பட்ட இளைஞர்களை மீட்க கோரிக்கை

இந்தோனேஷியாவில் சிறை பிடிக்கப்பட்டுள்ள பரமக்குடியை சேர்ந்த இளைஞர்களை மீட்கக்கோரி, அவர்களின் உறவினர்கள் தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள அக்ரமேசியை சேர்ந்தவர் கவின். இவருக்கு ரேவதி என்ற மனைவியும்…

இந்தோனேஷியாவில் சிறை பிடிக்கப்பட்டுள்ள பரமக்குடியை சேர்ந்த இளைஞர்களை மீட்கக்கோரி, அவர்களின் உறவினர்கள் தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள அக்ரமேசியை சேர்ந்தவர் கவின். இவருக்கு ரேவதி என்ற மனைவியும் 2 குழந்தைகளும் உள்ளனர். கவின், சென்னையிலுள்ள தனியார் நிறுவனம் மூலம் கப்பலில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், கடந்த 11 மாதங்களுக்கு முன் பணிக்கு சென்ற கவின், கடந்த 8-ம் தேதி சொந்த ஊர் திரும்ப இருந்த நிலையில், இந்தோனேஷிய விமான நிலையத்தில், கவின் உள்ளிட்ட 6 பேரை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். கவின் உள்ளிட்ட 6 பேரையும் 16 நாட்களாக சிறை பிடித்து வைத்துள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து இந்தோனேசியாவில் சிறைபிடிக்கப்பட்ட தமிழர்களை தமிழ்நாடு அழைத்து வர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், என உறவினர்கள் கோரிக்கை விடுத்து ராமநாதபுரம் ஆட்சியர் சந்திரலேகாவிடம் மனு அளித்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.