உலகளவில் இந்தியாவின் இளைஞர் சக்தி மிகப் பெரியது என்றும், இதன்மூலம் இந்தியா உலகையே மாற்றும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
கேரள மாநிலம் கொச்சியில் நடைபெற்ற பாஜக இளைஞர் பாசறை மாநாட்டிற்கு பிரதமர் நரேந்திர மோடி வருகை தந்தார். மலையாள கலாச்சார உடையில் வந்த பிரதமர் மோடியை, பாஜக தொண்டர்கள் மலர்கள் தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
பின்னர் மாநாட்டில் பேசிய பிரதமர், ”நாடு அமிர்த காலத்தில் பயணித்துக் கொண்டிருக்கும் நிலையில், கேரளாவில் இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் ஒன்று சேர்ந்திருப்பதை வரவேற்கிறேன். பாஜகவும் – இளைஞர்களும் ஒரே காட்சியை தான் பகிர்ந்து வருகின்றனர். அதனால் மத்திய அரசும் இளைஞர்களை முன்நிறுத்தி தான் செயல்பட்டு வருகின்றது.
கேரளாவில் மீனவர்கள் மற்றும் பழங்குடியின மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த மத்திய அரசு தொடர் முயற்சியில் இறங்கி உள்ளது. இளைஞர்களிடம் கருத்துக்களைக் கேட்டு, அதன்படியே மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதனால் தான் 13 மொழிகளில் தேர்வு எழுத நடவடிக்கை எடுத்தோம்.
இதையும் படியுங்கள் : 12 மணி நேர வேலை சட்டமசோதா நிறுத்திவைப்பு – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
மத்திய அரசு, இளைஞர்களின் தொழில் முன்னேற்றத்திற்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஆனால் கேரள அரசு, இதுபோன்ற எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதை கேரள இளைஞர்கள் உணர்ந்து வருகின்றனர். இந்த நூற்றாண்டு இந்தியாவுக்கு சொந்தமானது. உலகளவில் இந்தியாவின் இளைஞர் சக்தி மிகப் பெரியது. இதன்மூலம் இந்தியா உலகை மாற்றும். இந்தியா வேகமாக வளர்ந்து வரும் நாடு.
நாட்டின் புதிய பணியை நிறைவேற்ற, கேரள இளைஞர்களும் முன்வருகின்றனர். கேரளாவில் இருந்து பாரம்பரிய மருத்துவத்தை வெளி உலகுக்குக் கொண்டுவர மத்திய அரசு முயற்சி செய்து வருகிறது. கோவா போன்ற மாநிலங்களைப் போன்று, கேரளாவில் மாற்றம் வரும். விரைவில் கேரளாவில் பாஜக ஆட்சியைப் பிடிக்கும். சூடான் உள்நாட்டு கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களை மீட்பதற்காக ஆபரேஷன் காவேரியை மத்திய அரசு மேற்கொள்ளும். அதனை மத்திய அமைச்சர் வி.முரளீதரன் முன்னின்று நடத்துவார்” என்று தெரிவித்தார்.