கடந்த சில நாட்களாக தினசரி கொரோனா தொற்று எண்ணிக்கை குறைந்து வரும் நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 22,270 ஆக பதிவாகியுள்ளது.
தினசரி கொரோனா தொற்று எண்ணிக்கையை குறித்து மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 2 லட்சத்து 53 ஆயிரத்து 739 பேர் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், புதிதாக 22,270 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இது நேற்றைய எண்ணிக்கையை விட சற்று அதிகரித்து இருப்பதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
https://twitter.com/MoHFW_INDIA/status/1494885885992894466
ஒரே நாளில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த 325 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாகவும், அதே நேரத்தில், மொத்தமாக இதுவரை 4 கோடியே 20 லட்சத்து 37
ஆயிரத்து 536 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும், இரண்டு நாட்களுக்கு முன் 30,757 ஆக தினசரி கொரோனா தொற்று எண்ணிக்கை பதிவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், கொரோனாவை மேலும் கட்டுப்படுத்த நாடு முழுவதும் இதுவரை 175.03 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும், நாடு முழுவதும் கொரோனா பெருந்த்தொற்றை எதிர்த்து போராடும் வகையில், சிறார்களுக்கான தடுப்பூசி செலுத்தும் பணிகளும், பூஸ்டர் டோஸ் செலுத்தும் பணிகளும், ஆங்காங்கே சிறப்பு முகாம்கள் அமைத்து தடுப்பூசி செலுத்தும் பணிகளும் நடைப்பெற்று வருகிறது.







