29.7 C
Chennai
May 20, 2024
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

மியான்மரில் சிக்கியுள்ள இந்திய இளைஞர்களை மீட்க வேண்டும் – வேல்முருகன் வலியுறுத்தல்

தாய்லாந்தில் சிக்கியுள்ள தமிழ்நாடு உள்ளிட்ட இந்திய இளைஞர்களை மீட்க வேண்டும் என அரசுகளுக்கு வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.

 

தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவரும் பண்ருட்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தாய்லாந்து நாட்டில் வேலை ஏற்படுத்தி தருவதாக கூறி, தமிழ்நாடு, புதுச்சேரி தமிழர்கள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான இந்தியர்கள் மியான்மர் நாட்டிற்கு மாஃபியா கும்பல்களால் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக வெளியாகி இருக்கும் செய்தி அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது என குறிப்பிட்டுள்ளார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

 

கடத்தப்பட்ட தமிழர்கள், மியான்மார் நாட்டில் உள்ள மியாவாடி என்கிற எல்லைப் பகுதியில் சட்டவிரோத பணிகளில் ஈடுபடுத்தப்படுகிறார்கள் என்றும் ஆயுதம் தாங்கிய கும்பல்கள் தாய்லாந்து எல்லை மூலம் ஆள்கடத்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. இந்தியாவில் வேலையின்மையை எதிர்க்கொண்டு வரும் நன்கு படித்த இளைஞர்கள், கல்விக் கடனை செலுத்தவும், குடும்பத்தை காப்பாற்றவும் ஏதாவது ஒரு வேலை கிடைத்தால் போதும் என்ற மனநிலையில் உள்ளனர். இந்தச் சூழலை பயன்படுத்தி, வெளிநாட்டில் வேலை தருவதாக கவர்ச்சி விளம்பரங்கள் செய்யும் புரோக்கர்கள், ஏஜெண்ட்டுகள், தமிழ்நாடு, புதுச்சேரி இளைஞர்களை, நல்ல வேலை, நல்ல ஊதியம் வாங்கி தருவதாக கூறி, தாய்லாந்து நாட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

ஆனால், அவர்களை மியான்மர் நாட்டில் உள்ள மியாவாடி என்ற பகுதிக்கு கடத்திச் செல்லப்பட்டு அடைத்து வைக்கப்பட்டுள்ளதுடன், சட்டவிரோத பணிகளைச் செய்ய நிர்ப்பந்தம் செய்து, அடித்து சித்ரவதை செய்துள்ளனர். இது தொடர்பாக பாதிக்கப்பட்ட தமிழர்கள் வெளியிட்டுள்ள வீடியோவின் வாயிலாக, தமிழர்களுக்கு அடிப்படை மனித உரிமைகள் மறுக்கப்பட்டிருப்பதையும், கடுமையாக அடித்து உதைத்து துன்புறுத்தப்பட்டிருப்பதும் அறியலாம் என தெரிவித்துள்ளார்.

 

எனவே, தமிழ்நாடு அரசும், இந்திய அரசும், துரிதமாக செயல்பட்டு மியான்மரில் சிக்கியுள்ள தமிழர்கள் உள்ளிட்ட இந்திய இளைஞர்களை பாதுகாப்புடன் மீட்பதோடு, இச்சம்பவத்திற்கு காரணமான புரோக்கர்களையும், ஏஜெண்ட்களையும், கடத்தல் கும்பலையும் கைது செய்ய வேண்டும் என்றும் வேல்முருகன் கேட்டுக்கொண்டார்.

 

-இரா.நம்பிராஜன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading