இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் இடையே நடந்துவரும் டி20 போட்டிகளில் விளையாடிவரும் விராட் கோலி மற்றும் ரிஷப் பண்டிற்கு பிசிசிஐ ஓய்வளித்துள்ளது
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி, இந்திய அணியுடனான டி20 போட்டிகளில் விளையாடிவருகிறது. தொடர்ந்து நடந்த கடந்த 2 போட்டிகளில் இந்திய அணியே வெற்றி பெற்றது. இந்த நிலையில் இந்திய வீரர்கள் விராட் கோலி மற்றும் ரிஷப் பண்டிற்கு இந்திய அணி ஓய்வளித்துள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இது குறித்து பிடிஐ செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தியில், இந்தியா – இலங்கை இடையே நடக்கவுள்ள டி20 போட்டிகளில் விராட் கோலி மற்றும் ரிஷப் பண்ட் விளையாட மாட்டார்கள் என்று தெரிவித்துள்ளது. இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் இடையேயான இரண்டாவது டி20 போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்றது. இந்த போட்டிகளில் விராட் கோலி மற்றும் ரிஷப் பண்ட் இருவரும் 50 ரன்களுக்கும் மேல் எடுத்திருந்தனர்.
இந்திய கிரிக்கெட் போட்டிகளில் தொடர்ந்து விளையாடி வருபவர்களுக்கு ஓய்வளிப்பது வழக்கமாக உள்ளது. வேலை பளுவை குறைப்பதும், உடல் மற்றும் மன ரீதியான ஓய்வு கொடுப்பதை உறுதி செய்யவே இத்தகைய ஓய்வினை அளித்துவருகிறது பிசிசிஐ. இதனால் வரும் 24ம் தேதி நடக்கவுள்ள இலங்கையுடனான போட்டியில் இந்த வீரர்கள் கலந்துகொள்ள மாட்டார்கள் என்றும் அறிவித்துள்ளது. இந்த நேரத்தில் மயாங் அகர்வால், அஷ்வின் போன்றவர்கள் ஆட்டத்தில் முக்கிய பங்கு வகிப்பர் என்றும் தெரிவித்துள்ளது.