ஜார்க்கண்ட் மாநிலத்தில் அரசுப் பணியாளர் தேர்வாணையம் (JPSC) மற்றும் ஊழியர் தேர்வு வாரியம் (JSSC) மூலம் நடத்தப்படும் தேர்வுகளில் முறைகேடுகள் நடப்பதாகக் கூறி மாணவர்கள் கடந்த சில வாரங்களாக போராடி வருகின்றனர். ஏற்கனவே மாநில அரசு மாணவர்களிடம் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியது. இந்த பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்தன. இதனிடையே மாநில முழுவதும் போராட்டம் தீவிரமடைந்தது.
இந்த நிலையில் நேற்று அம்மாநில முதலமைச்சர் ஹேமந்த் சோரன் அமைச்சரவையை கூட்டி மாணவர் போராட்டம் குறித்து தீவிர ஆலோசனையில் ஈடுபட்டார். இதனையடுத்து, JSSC-CGL தேர்வு மற்றும் 2014 முதல் வெளிமுகமை நிறுவனமான TDPL-ஆல் நடத்தப்பட்ட அனைத்து தேர்வுகளையும் ரத்து செய்வதாக ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் அறிவித்தார்.
இந்த அறிவிப்பால் போராடி வந்த மாணவர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.




