அமெரிக்காவில் உள்ள உலக வர்த்தக மையத்தில் இந்தியாவின் சுதந்திர தினத்தை முன்னிட்டு டிஜிட்டல் முறையில் இந்திய தேசிய கொடி காட்சிப்படுத்தப்பட்டது.
இந்தியாவின் 75வது சுதந்திர தினம் நாடு முழுவதும் நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. பிரதமர் மோடி காலை 7.30 மணியளவில் டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
பின்னர் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அவர் தனது உரையில், அடுத்த 25 ஆண்டுகளில் நமது நாடு 100வது சுதந்திர தினத்தை கொண்டாடவுள்ளது. எனவே சுதந்திர போராட்ட வீரர்களின் கனவுகளை நனவாக்க மக்கள் 5 உறுதி மொழியேற்க வேண்டும் என்றார்.
மேலும் 75வது சுதந்திர தினத்தையொட்டி ஹர் ஹர் டிரையங்கா என்ற நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது. நாட்டு மக்கள் அனைவரும் ஆகஸ்ட் 13முதல் 15 வரை வீடுகளில் தேசிய கொடியேற்ற வேண்டும் என பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார். இதையடுத்து மக்கள் அனைவரும் தங்கள் வீடுகளிலும், வாகனங்களிலும் தேசிய கொடியை பறக்கவிட்டனர்.
இந்நிலையில் இந்தியாவின் சுதந்திர தினத்தை முன்னிட்டு நியூயார்க்கில் உள்ள உலக வர்த்தக மையத்தில் டிஜிட்டல் முறையில் இந்திய தேசியக் கொடி காட்சிப்படுத்தப்பட்டது.