30.5 C
Chennai
May 13, 2024
முக்கியச் செய்திகள் ஆசிரியர் தேர்வு தமிழகம்

கணித மேதைக்கு மரியாதை

கணித மேதை ராமானுஜனின் சீனிவாச இராமானுஜனின் 134 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் அமைந்துள்ள திருஉருவ சிலைக்கு மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம், அரசு தலைமை கொறடா கோவி.செழியன் உள்ளிட்டோர் மாலைகள் அணிவித்து மரியாதை செலுத்தினர்.
1887 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 22ஆம் தேதி ஈரோடு அருகே நாமகிரிப்பேட்டையில் சீனிவாச ராமானுஜன் பிறந்தார். இவரது தந்தை கும்பகோணத்தில் பணிபுரிந்ததால் இவரது தொடக்கக்கல்வி, கல்லூரிப் படிப்பு என அனைத்தும் கும்பகோணத்திலேயே அமைந்தது. எண் கணிதத்தில் ஆளுமை பெற்ற சீனிவாச ராமானுஜன் தனது 32 ஆவது வயதில் காலமானார்.  இன்று இவரது 134 ஆவது பிறந்த தினம் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
கணிதத்தில் சிறந்து விளங்கிய ராமானுஜன் கணித மேதை என்று அனைவராலும் கவுரவிக்கப்பட்டார். மேலும் இவரது பிறந்த தினத்தை முன்னிட்டு  கும்பகோணம் சாரங்கபாணி சுவாமி சன்னதி தெருவில் அவர் வாழ்ந்த இல்லத்தில் உள்ள அவரது சிலைக்கு கணிதத்துறை ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் மரியாதை செலுத்தினர். மேலும் மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம், அரசு தலைமை கொறடா கோவி. செழியன் உள்ளிட்டோர் மாலைகள் அணிவித்து மரியாதை செய்தனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading