எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில், பா.ஜ.க.வுக்கும் – அதனுடன் கூட்டு சேர்ந்து நாட்டின் ஒருமைப்பாட்டைச் சிதைப்பவர்களுக்கும் ‘விசா’ வழங்கி வெளியே அனுப்பிட மக்கள் ஆயத்தமாகிவிட்டார்கள் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தலுக்கான ஆயத்த பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. பாஜகவுக்கு எதிராக 26 கட்சிகள் கொண்ட எதிர்க்கட்சிகள் கூட்டணியின் ஆலோசனை கூட்டம் பெங்களூரூவில் நடைபெற்றது. இந்த கூட்டணிக்கு இந்தியா என பெயர் வைக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக முதலமைச்சர் மு..க.ஸ்டாலின் ட்விட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் “எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில், பா.ஜ.க.வுக்கும் – அதனுடன் கூட்டு சேர்ந்து நாட்டின் ஒருமைப்பாட்டைச் சிதைப்பவர்களுக்கும் ‘விசா’ வழங்கி வெளியே அனுப்பிட மக்கள் ஆயத்தமாகிவிட்டார்கள். அதனை மறைக்கத்தான் அமலாக்கத்துறை தொடங்கி அத்தனை அமைப்புகளையும் ஏவி அச்சுறுத்தும் வேலைகள் நடக்கின்றன.







