உலகின் வேகமாக வளரும் பொருளாதார நாடாக இந்தியா நீடிக்கும் என ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.
பொருளாதார அடிப்படைகள் வலுவாக இருப்பதாலும், நாட்டின் நிதித்துறை ஸ்திரத்தன்மையுடன் உள்ளதாலும் உலகின் வேகமாக வளரும் பொருளதார நாடாக இந்தியா தொடர்ந்து நீடிக்கும் என ஆர்பிஐ ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
டெல்லியில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் பேசிய ஆர்பிஐ ஆளுநர் சக்திகாந்த தாஸ், கொரோனா தொற்று பரவல், உக்ரைன் போர், நிதிச் சந்தை நெருக்கடி என்ற மூன்று பெரிய சவால்களை உலக பொருளாதாரம் சந்தித்து வருகிறது. தற்போது அதிகரித்து வரும் பணவீக்கத்தை கட்டுப்படுத்துவதற்காக உலக நாடுகளின் மத்திய வங்கிகளின் வட்டி விகிதங்களை உயர்த்தி வருவதால், நிதி சந்தை நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
சர்வதேச நிகழ்வுகளின் தாக்கம், இந்திய பொருளாதாரத்திலும் எதிரொலித்து வருகிறது. அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளும் பொருளாதார வீழ்ச்சியை எதிர்கொண்டு வருகின்றன. இந்தியாவை பொறுத்தவரை அடிப்படைகள் வலுவாக உள்ளன. நாட்டின் நிதித் துறையும் ஸ்திரத்தன்மையுடன் உள்ளது. நாட்டின் வங்கித்துறையும், வங்கி-சாரா நிதி நிறுவனங்கள் துறையும் இயங்கி வருகின்றன.
தற்போதைய சூழலில் பொருளாதார வளர்ச்சிக்கான கணிப்புகள் சிறப்பாகவே உள்ளன. நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7 சதவீதமாக இருக்கும் என ஆர்பிஐ கணித்துள்ளது. சர்வதேச நிதியம் (ஐஎம்எப்) 6.8 சதவீதம் இருக்கும் என கணித்துள்ளது. எனவே, நடப்பு 2022-2023ம் நிதியாண்டில் உலகின் வேகமாக வளரும் பொருளாதாரமாக இந்தியா நீடிக்கும்.
பணவீக்கம் பெரும் சவாலாக உள்ளது. கடந்த செப்டம்பரில் பணவீக்கம் 7.4 சதவீதமாக அதிகரித்தது. அக்டோபரில் அது 7 சதவீதத்துக்கு கீழே குறையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. நவீன காலத்தின் சவாலான மையத்தில் ஜி20 கூட்டமைப்பின் தலைமை பொறுப்பை இந்தியா ஏற்கவுள்ளது. தற்போதைய சூழ்நிலையில் போதுமான அளவில் அந்திய செலாவணி கையிருப்பு உள்ளதாக சக்திகாந்த தாஸ் கூறினார்.