இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் கட்டாக்கில் நடந்த முதலாவது போட்டியில் இந்தியா 101 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
நியூசண்டிகாரில் நடந்த 2-வது போட்டியில் தென் ஆப்பிரிக்கா 51 ரன் வித்தியாசத்தில் வென்றது. இதனை தொடர்ந்து தர்மசாலாவில் நடந்த 3-வது ஆட்டத்தில் இந்திய அணி மீண்டும் வெற்றி பெற்று தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இதனை தொடர்ந்து இரு அணிகளுக்கும் இடையிலான நான்காவது டி 20 போட்டி இன்று லக்னோவில் நடைபெற உள்ளது. இந்திய நேரப்படி மாலை 6 : 30 மணிக்கு டாஸ் போடப்பட்டு இரவு 7 மணிக்கு ஆட்டம் தொடங்கும் என்று அறிவிக்கபப்ட்டது. ஆனால் அதிக மூடு பணியின் காரணமாக டாஸ் போடுவதில் தாமதமாகியுள்ளது.
நடுவர்கள் மாலை 6 : 50, 7 : 30 மற்றும் 8 மணி என மூன்றுமுறை மைதானத்தின் நடுவில் இருந்து பார்வைத் திறனை ஆய்வை செய்தனர். ஆனால் நிலை விளையாடுவதற்கு ஏற்றதாக இல்லை. இதனை தொடர்ந்து அடுத்த ஆய்வு இரவு 8 : 30 மணிக்கு மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.







