IND vs SA நான்காவது டி 20 போட்டி : மூடு பணியால் டாஸ் போடுவதில் தாமதம்…!

லக்னோவில் நடைபெறும் இந்தியா – தென் ஆப்பிரிக்கா இடையிலான நான்காவது டி 20 போட்டியில் அதிக மூடு பணியின் காரணமாக டாஸ் போடுவதில் தாமதமாகியுள்ளது. 

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில்  கட்டாக்கில் நடந்த முதலாவது போட்டியில் இந்தியா 101 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

நியூசண்டிகாரில் நடந்த 2-வது போட்டியில் தென் ஆப்பிரிக்கா 51 ரன் வித்தியாசத்தில் வென்றது. இதனை தொடர்ந்து தர்மசாலாவில் நடந்த 3-வது ஆட்டத்தில் இந்திய அணி மீண்டும் வெற்றி பெற்று தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இதனை தொடர்ந்து இரு அணிகளுக்கும் இடையிலான நான்காவது டி 20 போட்டி இன்று லக்னோவில் நடைபெற உள்ளது. இந்திய நேரப்படி மாலை 6 : 30 மணிக்கு டாஸ் போடப்பட்டு இரவு 7 மணிக்கு ஆட்டம் தொடங்கும் என்று அறிவிக்கபப்ட்டது. ஆனால் அதிக மூடு பணியின் காரணமாக டாஸ் போடுவதில் தாமதமாகியுள்ளது.

நடுவர்கள் மாலை  6 : 50,  7 : 30  மற்றும் 8 மணி என மூன்றுமுறை  மைதானத்தின் நடுவில் இருந்து பார்வைத் திறனை ஆய்வை செய்தனர். ஆனால் நிலை விளையாடுவதற்கு ஏற்றதாக இல்லை. இதனை தொடர்ந்து அடுத்த ஆய்வு இரவு 8 : 30  மணிக்கு மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.