விவசாயிகளின் போராட்டம் குறித்து “ஏன் இதைப் பற்றி யாரும் பேசுவதில்லை” என பிரபல பாப் பாடகி ரிஹானா நேற்று ட்விட்டரில் கருத்து தெரிவித்திருந்த நிலையில், மத்திய அரசு தரப்பிலிருந்து அறிக்கைகளும், பல உள்நாட்டு பிரபலங்களும் அரசுக்கு ஆதரவாக கருத்துகளை பதிவிட்டிருந்தனர்.
அதனைத் தொடர்ந்து தற்போது, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ரிஹானாவின் கருத்துக்கு எதிராகவும், “தேசத்தின் ஒற்றுமையை அதற்கு எதிரான பிரச்சாரங்களால் ஒருபோதும் குலைத்துவிட முடியாது என்றும், இப்பிரச்சாரங்கள் தேசத்தின் வளர்ச்சியை தடுத்திடாது” என ட்வீட் செய்துள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மேலும், “இம்மாதிரியான கருத்து பிரச்சாரங்கள் நாட்டின் விதியை தீர்மானிப்பதில்லை, மாறாக முன்னேற்றங்களே நாட்டின் விதியை தீர்மானிக்கின்றன.” என்றும் கூறியுள்ளார்.