இந்தியாவில் மேலும் குறைந்தது கொரோனா தொற்று

இந்தியாவில் புதிதாக 7,579 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள தாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் கடந்த சில மாதங்களாக, கொரோனா தொற்று குறைந்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு…

இந்தியாவில் புதிதாக 7,579 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள தாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் கடந்த சில மாதங்களாக, கொரோனா தொற்று குறைந்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை தொற்றுப் பாதிப்பு எண்ணிக்கை ஏற்ற இறக்கமாகவும் இருந்து வந்ததுஇ. இந்நிலையில், கடந்த நான்கைந்து நாட்களாக தொடர்ந்து குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 7,579 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது நேற்றைய பாதிப்பை விட குறைவாகும். இதையடுத்து கொரோனா பாதிக்கப்பட்டவர் களின் மொத்த எண்ணிக்கை 3, 45, 26, 480 ஆக அதிகரித்துள்ளது. கேரளாவில் மட்டும் 3698 பேருக்கு தொற்றுப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு ஒரே நாளில் 75 பேர் உயிரிழந்துள்ளனர்.

தொற்று பாதிப்பில் இருந்து ஒரே நாளில் 12,202 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 3, 39, 34, 547 ஆக அதிகரித்துள்ளது. 236 பேர் தொற்று காரணமாக உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 4 , 66, 147 ஆக அதிகரித்துள்ளது. தற்போது, 1,13,584 பேர் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்ற னர்.

நாட்டில், இதுவரை 1,17,63,73,499 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 71,92,154 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.