இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்று பாதிப்பு நேற்றை விட 19% அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
கொரோனா 2வது அலை, நாடு முழுவதும் தற்போது குறைந்து வருகிறது. தடுப்பூசி செலுத்தும் பணி நாடு முழுவதும் முழு வீச்சில் நடைபெற்று வருவதும் தொற்றுப் பாதிப்பு குறைவதற்கு காரணமாக இருக்கிறது. தற்போது 3வது அலை வந்தால் அதனை எதிர் கொள்வதற்கான முன்னேற்பாடுகளில் மத்திய, மாநில அரசுகள் ஈடுபட்டு வருகின்றன.
கடந்த சில நாட்களுக்கு முன் 20 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்த கொரோனா தொற்று, இப்போது ஏற்ற இறக்கமாக இருக்கிறது. இந்நிலையில் இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 22,431 பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது நேற்றைய பாதிப்பை விட அதிகம்.
தொற்றில் இருந்து கடந்த 24 மணி நேரத்தில் 24,602 பேர் குணமடைந்து வீடு திரும்பி யுள்ளனர். இதுவரை 3,32,00,258 பேர் தொற்றில் இருந்து குணமடைந் துள்ளனர். தற்போது 2,44,198 பேர் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஒரே நாளில் 318 பேர் கொரோனா வுக்கு உயிரிழந்துள்ளனர். இது நேற்றைய இறப்பு எண்ணிக்கையை விட அதிகம். உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 4,49,856 ஆக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் இதுவரை 92,63,68,608பேருக்கு தடுப்பூசி போடப் பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 43,09,525 பேருக்கு தடுப்பூசி செலுத்தப் பட்டுள்ளது.








