இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 20,044 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 56 பேர் உயரிழந்துள்ளனர்.
நாடு முழுவதும் கொரோனா தொற்று படிப்படியாகக் குறைந்து வந்த நிலையில், தற்போது மீண்டும் அதிகரித்து வருகிறது. கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், அரசு பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும், முகக் கவசம் அணிதல், சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தல் உள்ளிட்டவற்றை தொடர்ந்து கடைப்பிக்க வேண்டும் என பொதுமக்கள் தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர்.
வெள்ளிக்கிழமை தொற்று பாதிப்பு எண்ணிக்கை 20,038 ஆக இருந்தது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 18,301 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 1 லட்சத்து 40 ஆயிரத்து 760ஆக உயர்ந்துள்ளது. சிகிச்சை பெறுவோரின் விகிதம் 0.32 சதவீதமாக உள்ளது.
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மேலும் 56 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து, தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்து 25 ஆயிரத்து 660ஆக அதிகரித்துள்ளது. தொற்றில் இருந்து 18,301 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 30 லட்சத்து 63 ஆயிரத்து 651 ஆக அதிகரித்துள்ளது.
-ம.பவித்ரா








