இந்தியாவில் ஒரே நாளில் 14,306 பேருக்கு கொரோனா

இந்தியாவில், கடந்த 24 மணி நேரத்தில் 14,306 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்தியாவில் கடந்த சில மாதங்களாக கொரோனா தொற்று குறைந்து வருகிறது. கடந்த நான்கைந்து…

இந்தியாவில், கடந்த 24 மணி நேரத்தில் 14,306 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கடந்த சில மாதங்களாக கொரோனா தொற்று குறைந்து வருகிறது. கடந்த நான்கைந்து நாட்களாக தொற்று ஏற்ற இறக்கமாக இருக்கிறது. இந்நிலையில் ஒரே நாளில் 14,306 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கேரளாவில் மட்டும் 8,538 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த 18,762 பேர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதுவரை 3,35,67,367 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். குணமடைவோர் விகிதம் 98.18 % ஆக உள்ளது. இப்போது 1,67,695 பேர் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்தியாவில் ஒரே நாளில் 443 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,54,712 ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் இதுவரை 102.27 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.