இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 11,903 பேருக்கு புதிதாகக் கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று குறைந்து வருகிறது. செவ் வாய்க்கிழமை 12,514 பேருக்கும் திங்கட்கிழமை 12,830 பேருக்கும் கொரோனா தொற்று பதிவாகி இருந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 11,903 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த 14,159 பேர் மருத்துவமனையில் இருந்து குணமாகி வீடு திரும்பியுள்ளனர். குணமடைந்தோர் சதவிகிதம் 98.22% ஆக இருக்கிறது. இதுவரை 3,36,97,740 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இப்போது 1,51,209 பேர் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியாவில் ஒரே நாளில் 311 பேர் உயிரிழந்துள்ளனர். இது நேற்றைய உயிரிழப்பை விட குறைவு.
நாடு முழுவதும் 1,07,29,66,315 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 41,16,230 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.