இந்தியாவில் புதிதாக 11,271 பேருக்கு கொரோனா

இந்தியாவில் புதிதாக 11,271 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள தாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் கடந்த சில மாதங்களாக, கொரோனா தொற்று குறைந்து வருகிறது. இந்த தொற்றுப் பாதிப்பு எண்ணிக்கை,…

இந்தியாவில் புதிதாக 11,271 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள தாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் கடந்த சில மாதங்களாக, கொரோனா தொற்று குறைந்து வருகிறது. இந்த தொற்றுப் பாதிப்பு எண்ணிக்கை, ஏற்ற இறக்கமாகவும் இருந்து வருகிறது. இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில்11,271 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,44,37,307 ஆக அதிகரித்துள்ளது.

தொற்று பாதிப்பில் இருந்து ஒரே நாளில் 11,376 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 3,38,37,859 ஆக உயர்ந்துள்ளது. 285 பேர் தொற்று காரணமாக உயிரிழந்துள்ளனர்.

இதன்மூலம் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 4,63,530 ஆக உயர்ந்துள்ளது. தற்போது, 1,35,918 பேர் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நாட்டில், இதுவரை 1,12,01,03,225 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 57,43,840 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.