டோக்கியோ ஒலிம்பிக் 75கி ஆடவருக்கான குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீரர் ஆசீஷ் குமார் தோல்வியடைந்துள்ளார்.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில், ஆடவருக்கான குத்துச்சண்டை 75கிலோ எடைப்பிரிவில் இந்திய வீரர் ஆசீஷ் குமார் சீனாவின் எர்பீக்கை எதிர்கொண்டார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மூன்று சுற்றாக நடைபெற்ற இந்த போட்டியில், முதல் சுற்றிலேயே சீன வீரர் ஆதிக்கம் செலுத்தினார். இதனைத் தொடர்ந்து இரண்டாவது மற்றும் மூன்றாவது சுற்றிலும் சீன வீரர் ஆதிகம் செலுத்து 5-0 என்கிற புள்ளி கணக்கில் இந்தியாவின் ஆசீஷை வீழ்த்தினார்.
ஆடவர் குத்துச்சண்டை போட்டியில் ஏற்கெனவே மணீஷ் கவுசிக், விகாஸ் கிரிஷண் தோல்வியடைந்த நிலையில், தற்போது அமித் பங்கல் மட்டுமே எஞ்சியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.