உலகிற்கே இந்தியா வழிகாட்டி கொண்டுள்ளது என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
மதுரையில் சௌராஷ்டிரா தமிழ்சங்கமம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் பங்கேற்று உரையாற்றினார். தமிழகம் ஆன்மீகமும், சேவையும் தழைத்தோங்கிய பூமியாக மாறி வருகிறது. தேச முன்னேற்றத்திற்கு, தேச நலனுக்கு பாடுபட்டவர்கள் தீவிரவாதிகளால் சமூகவிரோதிகளால் கொல்லப்பட்டனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
நம் நாடு வளர்ச்சியடைய வேண்டும். நாட்டின் வளர்ச்சி தான் நம் வளர்ச்சி. 9 ஆண்டுகளில் இந்தியா மிகப்பெரிய வளர்ச்சியை அடைந்துள்ளது. ஜி20 உலக நாடுகளின் கூட்டமைப்புக்கு தலைமை தாங்கும் நாடாக இந்தியா மாறி உள்ளது.
உலகத்திற்கு வழிகாட்டியாக உலகத்தை ஆளும் தலைவராக பிரதமர் நரேந்திர மோடி உள்ளார். வளரும் மற்றும் வளர்ந்த நாடுகளுக்கு தலைமையேற்கும் நாடாக இந்தியா வளர்ந்து வருகிறது. பிரதமரின் செயல்பாட்டால் எந்த நாடு நம்மை அடிமைப்படுத்தினார்களோ அந்த நாடுகளை தாண்டி உலக பொருளாதாரத்தில் 5வது இடத்திற்கு முன்னேறி உள்ளோம்.
ரஷ்யா-உக்ரைன் இடையே போர் நடக்கும் சூழலில் 23,000 மருத்துவ மாணவர்களை உக்ரைனில் இருந்து பத்திரமாக மீட்டு இந்தியாவுக்கு அழைத்துவந்தோம். உலகத்திற்கே இந்தியா வழிகாட்டி கொண்டுள்ளது. அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா எப்படி இருக்க வேண்டும் என்றும், முன்னேறிய தேசமாக இருக்க வேண்டும் என திட்டமிட்டு இந்தியா பயணித்து கொண்டுள்ளது என்று கூறினார்.