“2027-ம் ஆண்டில் உலகின் 3-வது பெரிய பொருளாதாரமாக இந்தியா உருவெடுக்கும்” – மத்திய நிதியமைச்சகம்!

அடுத்த 3 ஆண்டுகளில் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக இந்தியா மாறும் என்று மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இடைக்கால பட்ஜெட்டுக்கு முன்னதாக மத்திய நிதியமைச்சகம் ‘இந்தியப் பொருளாதாரம்: ஒரு சீராய்வு’ எனும்…

அடுத்த 3 ஆண்டுகளில் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக இந்தியா மாறும் என்று மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடைக்கால பட்ஜெட்டுக்கு முன்னதாக மத்திய நிதியமைச்சகம் ‘இந்தியப் பொருளாதாரம்: ஒரு சீராய்வு’ எனும் தலைப்பிலான அறிக்கையை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: “நிதித்துறையில் தற்போது செய்யப்பட்டு வரும் சீர்திருத்தங்களைத் தொடர்ந்து, இந்தியாவின் பொருளாதாரம் வரக்கூடிய ஆண்டுகளில் 7 சதவீதத்திற்கு மேல் வளர்ச்சியடையுமென எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படியுங்கள் ; 2024-25-ம் ஆண்டிற்கான யுனெஸ்கோ உலக பாரம்பரிய பட்டியல்- செஞ்சிக் கோட்டை பரிந்துரை!

இதையடுத்து, அடுத்த மூன்றாண்டுகளில் இந்தியா உலகின் 3-வது பெரிய பொருளாதாரமாக மாறும். மேலும் 2030 – ஆம் ஆண்டுக்குள் 5 டிரில்லியன் டாலர் ஜிடிபி மற்றும் 7 டிரில்லியன் டாலர் மதிப்புடைய பொருளாதார சக்தியாக வளர்ச்சியடையும். மேலும், தற்போதைய சீர்திருத்தங்கள் தடைபடாமல் தொடர்ந்தால், 2047 ஆம் ஆண்டுக்குள் ‘வளர்ந்த நாடு’ எனும் இடத்தை நாம் அடைய முடியும். இந்தியப் பொருளாதாரம் 2024 ஆம் நிதியாண்டில் 7 சதவீதம் அல்லது அதற்கும் மேலான வளர்ச்சி விகிதத்தை அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது ஒரு குறிப்பிடத்தக்க சாதனையாகும்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்த, மத்திய மாநில அரசுகளின் முழுமையான பங்கேற்பும் ஒத்துழைப்பும் அவசியம் என்பதையும் அந்த அறிக்கை வலியுறுத்துகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.