நீட் தேர்வுக்கான விண்ணப்பக் கட்டணம் உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது.
2023ஆம் கல்வி ஆண்டிற்கான நீட் நுழைவுத் தேர்வு மே 7ஆம் தேதி நடைபெறும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. இதனிடையே நீட் தேர்வுக்கான விண்ணப்ப படிவங்களை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது. அதன்படி, நீட் தேர்வு எழுதும் மாணவர்கள் தேசிய தேர்வு முகமையின் https://neet.nta.nic.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். ஏப்ரல் 7ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஹால் டிக்கெட் உள்ளிட்ட தேர்வு தொடர்பான பிற தகவல்கள் பின்னர் வெளியாகும் எனக் கூறப்பட்டுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில், இளநிலை மருத்துவப் படிப்பில் சேருவதற்கான நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது. நேற்று விண்ணப்ப பதிவு துவங்கியது. வரும் ஏப்ரல் 6ஆம் தேதி வரை இளநிலை மருத்துவப் படிப்பிற்கான நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். http://www.nta.nic.in என்கிற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
கடந்த ஆண்டைக் காட்டிலும் பொதுப் பிரிவினர், பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் சாதியினர், பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் விண்ணப்பிக்க கடந்த ஆண்டை காட்டிலும் 100 ரூபாய் கட்டணத்தை தேசிய தேர்வு முகமை உயர்த்தியுள்ளது. பொதுப் பிரிவினருக்கு 1,700 ரூபாயும், பிற்படுத்தப்பட்டோர், EWS பிரிவினருக்கு 1,600 ரூபாயும், எஸ்.சி., எஸ்.டி மாணவர்களுக்கு 1000 ரூபாயும் கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. வெளிநாட்டு மாணவர்களுக்கான கட்டணமாக 9,500 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டு 8,500 ரூபாயாக இருந்தது.
-ம.பவித்ரா