நிதியமைச்சர் பேசியதாக வெளிவந்த ஒலி நாடா தொடர்பாக, ஆளுநர் ஆர்.என்.ரவியை, தமிழ்நாடு பாஜக தலைவர்கள் குழு இன்று சந்திக்க உள்ளது.
இது தொடர்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள இன்று அறிக்கையில், அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாக வெளிவந்த ஒலிநாடாவின் உண்மை தன்மையை சுதந்திரமான, நியாயமான தடயவியல் தணிக்கை செய்யக்கோரி, பாஜக தலைவர்கள் குழு, ஆளுநரை இன்று சந்திக்க உள்ளதாக கூறியுள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மேலும் ஒலி நாடா பொய்யானது எனக்கூறும் அமைச்சர் பிடிஆர், தனது குரலை வைத்து, இதேபோல் ஒலி நாடாவை தயாரிக்குமாறு தெரிவித்துள்ள அண்ணாமலை, நீதிமன்றத்தின் மேற்பார்வையில் இரு ஒலி நாடாக்களின் உண்மைத்தன்மையை நீதிமன்றம் விசாரித்து கூறட்டும் என குறிப்பிட்டுள்ளார்.
- பி.ஜேம்ஸ் லிசா