கொரோனா பாதிப்பில், தமிழ்நாடு உச்சநிலை அடைவதற்கு இன்னும் ஒரு வாரம் முதல் பத்து நாட்கள் வரை தேவைப்படலாம் என டாக்டர் ராதா தெரிவித்துள்ளார்.
மும்பையின் புதிய நோய் தொற்று அளவுகள், சரியாக இரண்டு வாரங்களில் உச்ச நிலை அடைந்து கீழே இறங்க ஆரம்பித்து விட்டது. இதேபோல, தமிழ்நாடு உச்சநிலை அடைவதற்கு இன்னும் ஒரு வாரம் முதல் பத்து நாட்கள் வரை தேவைப்படலாம்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த பொங்கல் விடுமுறை முழுவதும் உள்ளேயே இருந்தால் நாம் நோய் தொற்று அளவுகளை பெரிதளவில் குறைத்து விட்டு ஜனவரி இறுதியில் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப வாய்ப்பு உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், பொங்கல் விடுமுறையை அறிவிக்கப்படாத லாக் டவன் ஆக கருதி வீட்டில் உட்கார்ந்து அண்ணாத்தே படம் பார்த்து கொண்டாடுவது நமக்கும், நம் நாட்டிற்கும் நல்லது! என அவர் தெரிவித்துள்ளார்.