தி.மு.க. வேட்பாளர் டி.எம்.செல்வகணபதியை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
மக்களவை தேர்தல் வாக்குப்பதிவுக்கு இன்னும் 20 நாட்கள் உள்ளன. பிரச்சாரத்துக்கு 18 நாட்கள் மட்டுமே அவகாசம் உள்ளது. அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் அனைவரும் பிரச்சாரத்தில் முழுமூச்சாக ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் படியுங்கள் : வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளை வெளியிட தடை – தோ்தல் ஆணையம் உத்தரவு!
அந்தவகையில், சேலம் திமுக வேட்பாளர் செல்வகணபதியை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாக்கு சேகரித்தார். சேலம் அக்ரஹாரம் மார்க்கெட் பகுதியில் நடைபயணமாக சென்று மக்களிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்கு சேகரித்தார். பின்னர் இன்று மாலை தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.









