புதுக்கோட்டை மாவட்டம், எஸ்.குளவாய்பட்டியில் விவசாயம் செழிக்க வேண்டி,
தானியங்களை வைத்து தெய்வங்களை வணங்கி நல்லேர் பூட்டி
விளை நிலத்தை உழுது விவசாயத்தை கிராம மக்கள் போற்றினர்.
புதுக்கோட்டை மாவட்டம் , வானம் பார்த்த பூமியான இது விவசாயத்தை மட்டுமே
பிரதான தொழிலாக கொண்டுள்ளது. இந்நிலையில், ஒவ்வொரு ஆண்டு சித்திரை
முதல் நாளன்று விவசாயிகள் அனைவரும் ஒன்றிணைந்து , நல்லேர் பூட்டி விளை
நிலத்தை வழிபட்டால் அந்த ஆண்டு நல்ல மழை பெய்யும் என்பது ஐதீகம். அதன்படி,
இன்று புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில்
விவசாயிகள் நல்லேர் பூட்டி வழிபட்டனர்.
மேலும், புதுக்கோட்டை மாவட்டம் எஸ்.குளவாய்பட்டி காடுவார அய்யனார், சப்பானி கருப்பர் மற்றும் பரிவார தெய்வங்களை, பழங்கள், பச்சரிசி மற்றும் தானியங்களை வைத்து வணங்கி காப்பரிசியை கிராம மக்களுக்கு பகிர்ந்தனர். பின்னர், 11ஜோடி காளை மாடுகளை கொண்டு நல்லேறு பூட்டி விளை நிலத்தை உழுதனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மேலும், பெண்கள் கும்மியடித்து, குலவையிட்டு எந்த ஒரு இயற்கை பேரிடரிலும் விவசாயிகளும் விவசாயமும் பாதிக்க கூடாது என்றும், நாடு செழிக்க வேண்டும் நல்ல மழை பெய்ய வேண்டும் என வேண்டினர்.
—-கு.பாலமுருகன்