சட்டவிரோத குவாரிகள்; தமிழக அரசுக்கு மதுரை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

சட்டவிரோத குவாரிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து தமிழக அரசு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்ய இறுதியாக 1 வார கால அவகாசம் வழங்கி மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் சட்டவிரோத குவாரிகள் நடத்தப்படுவதாக…

சட்டவிரோத குவாரிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து தமிழக அரசு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்ய இறுதியாக 1 வார கால அவகாசம் வழங்கி மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் சட்டவிரோத குவாரிகள் நடத்தப்படுவதாக ஏராளமான புகார்கள் வந்த நிலையில், சட்டவிரோத குவாரிகளை நடத்துவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தானாக முன்வந்து வழக்காக எடுத்து விசாரித்தது.

இந்த வழக்கை ஏற்கனவே விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தமிழகம் முழுவதிலும் சட்ட விரோத குவாரிகள் நடத்தப்படுவதை தடுப்பதும், குவாரிகள் நடத்துவோர் மீது உரிய நடவடிக்கை எடுப்பதும் அவசியம். தெரிவித்த நீதிமன்றம் இது குறித்து அரசு தரப்பில் பதில் அளிக்க உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் இந்த வழக்கு இன்று நீதிபதிகள் மகாதேவன், சத்யநாராயண பிரசாத் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அரசுத்தரப்பில் அறிக்கை தாக்கல செய்யப்படவில்லை. அதற்கு நீதிபதிகள், “சட்டவிரோத குவாரிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து தமிழக அரசு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டும், தற்பொழுது வரை ஏன் எவ்விதமான பதிலும் தெரிவிக்கவில்லை? என கேள்வி எழுப்பினர்.

அரசு தரப்பில் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய ஒருவாரம் கால அவகாசம் கோரப்பட்டது. இதனைத் தொடர்ந்து நீதிபதிகள் இறுதியாக ஒரு வார கால அவகாசம் வழங்கப்படுகிறது. விரிவான அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை ஒரு வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.