ஆன்மீகம், கலாச்சாரத்தை நீக்கினால் சாதாரண மந்தை கூட்டம் போல தான் இருப்போம் என டி.ஜி.வைஷ்ணவ கல்லூரி பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி கருத்து தெரிவித்துள்ளார்.
சென்னை அரும்பாக்கத்தில் உள்ள டி.ஜி.வைஷ்ணவ கல்லூரியின் 55 வது பட்டமளிப்பு விழா இன்று நடைப்பெற்றது. இதில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி கலந்து கொண்டார். இந்த பட்டமளிப்பு விழாவில் 2018 மற்றும் 2019 ஆம் ஆண்டு கல்லூரி படித்து முடித்த இளங்கலை மற்றும் முதுகலை என்று மொத்தம் 128 மாணவர்கள் பட்டம் பெற்றனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
பட்டங்களை வழங்கிய பின்னர் ஆளுநர் ஆர்.என்.ரவி மாணவர்களிடையே உரையாடினார். அப்போது, “மதிப்பிற்குரிய மாணவச்செல்வங்களே” என்று தனது உரையை தொடங்கி பட்டம் பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்தார். இன்றைக்கு நீங்கள் வாங்கிய பட்டம் என்பது உங்களுடைய கடின உழைப்புக்கு கிடைத்த வெற்றி.
உங்கள் வாழ்க்கையில் அடுத்த கட்டத்தை வெற்றியுடன் தொடங்குங்கள் எனக் கூறினார். பிரிட்டிஷ் இந்தியாவை விட்டு வெளியேறிய சமயத்தில், காந்தி வேறு ஒரு இடத்தில் உட்கார்ந்து கொண்டு சிந்தனையில் இருந்தார். அப்போது, இந்த தருணத்தை பற்றி என்ன நினைக்கிறீர்கள் என கேட்டவர்களிடம், காலணி ஆதிக்கத்தை ஒழிப்பதற்கு இன்னும் நேரம் எடுத்துக்கொள்ளும். பிரிட்டிஷ் பல வகையில் நமது வளங்களை சுரண்டி உள்ளனர் என காந்தி தெரிவித்ததாக ஆளுநர் சுடடிக்காட்டினார்.
இந்த நாட்டின் கிராம பகுதிக்கு சென்றாலும், அவர்களின் தினசரி வாழ்கையில் நமது கலாச்சாரத்துடன் வாழ்கிறார்கள். நமது பாரத நாட்டில் இருந்து ஆன்மீகம் மற்றும் கலாச்சாரத்தை நீக்கினால், ஒரு சாதாரண மந்தை கூட்டம் போல தான் நாமும் இருப்போம் என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
-பரசுராமன்.ப