குழந்தை திருமணம் பெற்றோர் செய்து வைக்கும் பெற்றோர்கள் மீது குண்டர் சட்டம் பாயும் என விழுப்புரம் எஸ்.பி.ஸ்ரீநாதா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் மாநில மகளிர் ஆணைய தலைவி குமாரி தலைமையில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஆட்சியர் மோகன், எஸ் பி ஸ்ரீநாதா, அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இக்கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த குமாரி கூறுகையில், தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களில் போக்சோ வழக்குகள் அதிகரித்த நிலையில் தற்போது பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறைந்து வருவதாகவும், இருளர் சமுதாய பெண்களுக்கு எதிரான குற்றங்களை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் விசாகா கமிட்டியை அனைத்து அலுவலகங்களிலும் செயல்படுத்த வலியுறுத்தப்பட்டு வருவதாக கூறினார்.
பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து புகார் அளிக்க 181 என்ற தொடர்பு எண்னை பெண்கள் பயன்படுத்துவதாகவும் இதில் பெண்களுக்கு அதிகளவு விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
பின்னர் பேசிய எஸ்.பி.ஸ்ரீநாதா கூறுகையில், குழந்தை திருமணத்திற்கு கட்டாயப்படுத்தும் பெற்றோர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் அல்லது போக்சோ வழக்குகள் பதியப்படும் என எச்சரிக்கை விடுத்தார்.