32.2 C
Chennai
September 25, 2023
முக்கியச் செய்திகள் தமிழகம்

திமுக ஆட்சிக்கு வந்தால் ரவுடிசம் தலைதூக்கிவிடும் – முதல்வர் பழனிசாமி

திமுக ஆட்சிக்கு வந்தால் ரவுடிசம் தலைதூக்கிவிடும், என முதல்வர் பழனிசாமி விமர்சித்துள்ளார்.

கோவை மாவட்டத்தில் முதல்வர் பழனிசாமி திறந்த வேனில், சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். மேட்டுப்பாளையத்தில் பிரச்சாரம் மேற்கொண்ட அவர், விவசாயிகளுக்கு இரட்டிப்பு லாபம் தரும் திட்டங்கள் தயாராகி வருவதாக கூறினார். மேலும், அதிமுக ஆட்சியில், தமிழகத்தில் பள்ளிக்கல்வி முன்னேற்றம் அடைந்துள்ளதாகவும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

பெரியநாயக்கன் பாளையத்தில் பிரச்சாரம் மேற்கொண்ட அவர், திமுக ஆட்சிக்கு வந்தால் ரவுடிசம் தலைதூக்கிவிடும், என விமர்சித்தார். மேலும், கச்சத்தீவு யாருடைய ஆட்சியில், இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டது?, ஹைட்ரோ ஹார்பன் திட்டம் மற்றும் நீட் தேர்வு ஆகியவை, யார் ஆட்சியில் கொண்டு வரப்பட்டது, என அடுக்கடுக்காக அவர் கேள்வி எழுப்பினார். அதிமுகவின் சாதனைகளை துண்டுச் சீட்டு இல்லாமல், விவாதிக்க தான் தயார் என கூறிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அதேபோல் ஸ்டாலின் தயாரா எனவும் சவால் விடுத்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:

Share to KooShare to WhatsappShare to PinterestShare to TelegramShare to Print

Related posts

ராகுல் காந்திக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பிறந்த நாள் வாழ்த்து!

Web Editor

தனியார் நிறுவனங்களில் தமிழ்நாட்டவர்க்கு 80% வேலை-சட்டம் நிறைவேற்ற வேண்டும்; ராமதாஸ்

Halley Karthik

ஈரோடு இடைத்தேர்தல் அலுவலர் வீட்டில் அதிரடி சோதனை!

Web Editor

Leave a Reply