திமுக ஆட்சிக்கு வந்தால் வன்னியர்களுக்கான உள்ஒதுக்கீட்டை ரத்து செய்துவிடுவார்கள் என தேர்தல் பரப்புரையில் அமைச்சர் சரோஜா தெரிவித்துள்ளார்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை அடுத்த நாமகிரிப்பேட்டை ஒன்றியத்துக்குட்பட்ட காக்காவேரி, பூசாரிபாளையம், ஜே.ஜே காலனி மற்றும் உள்ளிட்ட பகுதிகளில் சமூகநலம் மற்றும் சத்துணவு திட்டத்துறை அமைச்சர் சரோஜா தீவிர பரப்புரை மேற்கொண்டார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அப்போது பேசிய அவர், திமுக ஆட்சிக்கு வந்தால் வன்னியர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள 10.5 சதவீத உள்ஒதுக்கீட்டை ரத்து செய்துவிடுவார்கள் என்றும், மீண்டும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக ஆட்சி அமைந்தால் மட்டுமே வன்னியர்களுக்கான உள்ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்படும் எனக் கூறினார்.