இந்திய கிரிக்கெட் அணி, உலக கோப்பை டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் நியூசிலாந்து அணியை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டி இங்கிலாந்தில், வரும் 18 ஆம் தேதி தொடங்க இருக்கிறது.
நியூசிலாந்து கிரிக்கெட் அணி, இங்கிலாந்து அணியுடன் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இப்போது விளையாடி வருகிறது. முதல் போட்டி டிராவில் முடிந்த நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டி இப்போது நடந்து வருகிறது. இந்த போட்டிகள் நியூசிலாந்து அணிக்கு பயிற்சி ஆட்டமாக இருக்கும் நிலையில், இந்திய அணிக்கு பயிற்சி ஆட்ட வாய்ப்பு இல்லாததால், அது பின்னடைவு என்கிறார்கள்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில், இந்திய அணியில் ரோகித் சர்மா நிதானமாக, சரியான பந்துகளை எதிர்கொண்டு ஆடவேண்டும் என்று ஆலோசனை கூறியிருக்கிறார், முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் வீரேந்திர சேவாக்.
அவர் கூறும்போது, நியூசிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர்களான டிரென்ட் போல்ட், டிம் சவுதி ஆகியோர் இந்திய வீரர்களுக்கு கடுமையான சவாலை கொடுப்பார்கள். போல்ட் பந்துவீச்சை ரோகித் சர்மா எதிர்கொள்ளும் விதத்தைப் பார்க்க ஆவலாக இருக்கிறேன். ரோகித் சர்மா செட்டாகிவிட்டால், அவருக்கும் போல்ட்டுக்குமான ஆட்டம் விருந்தாகவே இருக்கும். ரோகித் சர்மா சிறந்த பேட்ஸ்மேன். அவர் ஏற்கனவே இங்கிலாந்து மண்ணில் ஆடி அனுபவம் இருப்பதால், இந்த டெஸ்ட் போட்டியில் சிறப்பாக செயல்படுவார். தொடக்க ஆட்டக்காரர் யாராக இருந்தாலும் புதிய பந்தில், முதல் 10 ஓவர்களில் நிதானமாக ஆடி, சூழலைப் புரிந்துகொண்டால், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியும்’ என்று தெரிவித்துள்ளார்.