நான் முதல்வன் திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு நாளை மறுநாள் பயிற்சி வகுப்புகள் தொடங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
மாணவர்கள் கல்வி நிலையத்தை விட்டு வெளியேறும் போதே வேலை கிடைக்கவும், இடைநின்ற மாணவர்களின் திறனை வளர்த்து, வாழ்வாதாரம் சிறந்து விளங்கவும், மாணவர்களை தொழில் முனைவோராக்கவும் என எல்லாவற்றையும் ஒருங்கிணைந்த திட்டம் தான் நான் முதல்வன் திட்டம்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதையொட்டி அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கு நான் முதல்வன் திட்டத்தில் மாணவர்களுக்கு எவ்வாறு பயிற்சி அளிக்க வேண்டும் என்பது குறித்து பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
அதில் மாணவர்கள் என்ன உயர்கல்வி படிப்புகள் என்னென்ன படிக்கலாம்? மாணவர்களுக்கு எவ்வாறு வழிகாட்டுதல்கள் வழங்கலாம்? மாணவர்கள் வளர்த்துக்கொள்ள வேண்டிய திறன்கள் என்னென்ன? வேலைவாய்ப்பு உலகை புரிந்துகொள்ளுதல் எவ்வாறு?, போட்டித்தேர்வுக்கு தயாராவது எவ்வாறு? என்று மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கப்படும்.
இதையடுத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கு நாளை மறுநாள், அவரவர் மாவட்டங்களில் பயிற்சி வகுப்பு நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு ஆசிரியர்கள் பயிற்சி வழங்க ஏதுவாக, அவர்களை தயார்படுத்தும் நிகழ்வில் ஆசிரியர்கள் கட்டாயம் பங்கேற்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.