கட்சியில் இருந்து கவுதமி விலகியது தனக்கும் கஷ்டத்தை கொடுத்திருக்கிறது என்றும், நிச்சயமாக மீண்டும் அவரை தொடர்பு கொண்டு பேசுவேன் என்றும் பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
கோவை கோட்டை ஈஸ்வரன் கோயிலில் பாஜக சார்பில் இன்று சிறப்பு பூஜை நடைபெற்றது. அதில் கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் வானதி சீனிவாசன் கலந்துகொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், கவுதமி கட்சி இருந்து விலகியது தனக்கும் கஷ்டத்தை கொடுத்திருக்கிறது என்றும், நிச்சயம் அவரை தொடர்பு கொண்டு பேசி, உதவிகளை செய்வேன் என்றும் தெரிவித்தார்.
கோவை மாநகரம் பாதுகாப்பற்ற சூழ்நிலையில் இருப்பதை மாநில அரசு புரிந்து கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார். பாஜக தொண்டர்கள், சமூக வலைதளங்களில் சிறு பதிவை செய்தால் கூட மாநில அரசு வழக்கு பதிவு செய்து விடுகிறது. ஆனால் சமூக வலைதளங்களில் திமுக நிர்வாகிகள் பிரதமரை கீழ்த்தரமாக விமர்சித்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை என குற்றம்சாட்டினார்.
இதையும் படியுங்கள் : விஜய் ரசிகர்களே ரெடியா?? – நாளை ‘தளபதி 68’ பட அப்டேட்..!
‘லியோ’ படத்தை பார்ப்பதற்கு தனக்கு நேரமில்லை என்று கூறிய அவர், விடுமுறையில் வாய்ப்பு கிடைத்தால் படத்தை பார்ப்பேன் என்று தெரிவித்தார். சினிமாவையும் அரசியலையும் தமிழ்நாட்டில் பிரித்துப் பார்க்க முடியாது என்று கூறிய வானதி சீனிவாசன், நல்ல ஒரு பொழுதுபோக்கு படமாக இருந்தால், அதனை சென்று பார்ப்பதில் தவறில்லை என்று தெரிவித்தார்.







